5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 13 வயது சிறுவன்

Update: 2023-04-30 04:42 GMT

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே, ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். பீடி காலனியில், 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுவன், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மேலப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்