கொலுசுகளை திருடுவதற்காக.... 100 வயது மூதாட்டியின் கால்களை துண்டித்த கொடூரம்

Update: 2022-10-09 15:06 GMT

நகைக்காக 100 வயது மூதாட்டியின் கால்களை துண்டித்து கொலுசை திருடி சென்ற கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ஜெய்பூரில் தனியாக இருந்த மூதாட்டியின்

கால்களை ஆயுதத்தால் துண்டித்த மர்ம நபர், அவரின் கால்களில் இருந்த கொலுசை திருடி சென்றுள்ளார்.

மூதாட்டியின் அலறல் சத்தத்தால் வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்தில் மூதாட்டியின் துண்டிக்கப்பட்ட கால்களும், ஆயுமும் கைப்பற்றப்பட்டன. .

கடந்த மாதம் இதேபோன்று புந்தி மாவட்டத்தில் வெள்ளி கொலுசுக்காக 75 வயது மூதாட்டியின் கால்கள் துண்டிக்கப்பட்டன.

தொடர்ந்து நகைக்காக மூதாட்டிகளை குறி வைத்து கால்களை துண்டிக்கும் கொடூரம், ராஜஸ்தானில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்