ஓடும் காரில் தாய், 6 வயது மகளுக்கு நடந்த கொடுமை - சிக்கிய முக்கிய பிரமுகர்கள்

Update: 2022-07-01 03:22 GMT

உத்தரகாண்டில் ஓடும் காரில் பெண் மற்றும் அவரது 6 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த 24ம் தேதி ரூர்கி நகரில், பெண் மற்றும் அவரது 6 வயது மகளை காருக்குள் வைத்து கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் கடந்த ஆறு நாட்களாக துப்பு துலக்கிய போலீஸார், பாரதிய கிஷான் யூனியனைச் சேர்ந்த சுபோத் காக்ரன், விக்கி தோமர், சோனு மற்றும் அவர்களது நண்பர்கள் என ஐந்து பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்