ஒரே படகில் 40 பேர்... யமுனா நதியில் கவிழ்ந்த படகு - அதிர்ச்சி காட்சிகள்

Update: 2022-08-14 08:20 GMT

ஒரே படகில் 40 பேர்... யமுனா நதியில் கவிழ்ந்த படகு - அதிர்ச்சி காட்சிகள்


உத்தபிரதேச மாநிலம் யமுனா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் 12 உடல்கள் மீட்கப்பட்டன. பிண்டா மாவட்டத்தில் உள்ள யமுனா நதியில் 40 பேர் ஒரே படகில் சென்றுள்ளனர். அப்பொழுது பலத்த காற்றின் காரணமாக நிலைத்தடுமாறிய படகு நதியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 3 பேர் காணவில்லை என கூறப்படுகிறது. ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணியில் சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்