தாயை இழந்த சகோதரிகளுக்கு அடித்த லக்.. ஒரே நேரத்தில் மூணுபேரும் அசத்தல் | Arakonam

Update: 2022-10-23 05:38 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், கடின உழைப்பின் பலனாக ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் காவலர்களாக தேர்வாகி, பயிற்சி முடித்துள்ளனர்.

அரக்கோணத்தை அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், சகிலா தம்பதி. இவர்களுக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி மற்றும் நிரஞ்சனி ஆகிய மூன்று மகள்களும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். சகிலா இறந்த நிலையில், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த மூன்று பெண்களும், 3 ஆண்டுகளாக காவலர் தேர்வில் கலந்து கொண்டு தொடர் தோல்வி அடைந்து வந்தனர். காவலர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த மூன்று பேரும், தங்களது கடின உழைப்பால், ஒரே நேரத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலர்களாக பயிற்சியை முடித்துள்ளனர். இது அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது, அந்த கிராமத்திரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்