நாட்டு கோழி குழம்புக்கு ரூ.2 கோடி, 100 பவுன்..ஒரு தலைமுறையே உட்கார்ந்து சாப்பிடலாம்..

Update: 2023-06-11 10:35 GMT

கோவை புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. , ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கு, வர்ஷினி என்ற இளம்பெண் 3 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகி நெருங்கி பழகி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் வர்ஷினி, நாட்டு கோழி குழம்பில் மயக்க மருந்து கலந்து ராஜேஸ்வரிக்கு கொடுத்து விட்டு, அவரது வீட்டிலிருந்த 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், கொள்ளையில் தொடர்புடைய 3 பேரை கடந்த மாதம் கைது செய்து, 3லட்சம் ரொக்கம் , 31 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது கொள்ளையில் முக்கிய குற்றவாளியான வர்ஷினி மற்றும் அவரது கார் ஓட்டுனர் நவீன்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 70 பவுன் தங்க, வைர நகைகள், 40 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்