சென்னையின் பிரதான சாலையில் பட்டா கத்தி முனையில் 175 சவரன் நகை கொள்ளை - சினிமாவை மிஞ்சிய சம்பவம்

Update: 2023-03-21 12:33 GMT

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள நகைக்கடையிலிருந்து, சிறிய நகை கடைகளுக்கு நகைகள் எடுத்து செல்லப்பட்டு விற்கப்படுவது வழக்கம். அந்தவகையில் நகைகளை எடுத்து சென்ற நகைக்கடை ஊழியர்கள், முதலில் மாதவரத்தில் விற்பனை செய்துவிட்டு, பின்னர் வெங்கல் நோக்கி சென்றுள்ளனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து, பட்டா கத்தியுடன் வந்த 3 பேர், நகைக்கடை ஊழியர்களின் இருசக்கர வாகனத்தை மறைத்து நகையை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது ஊழியர்கள் நகையை தர மறுத்ததால், பட்டா கத்தியால் அவர்களை தாக்கிய அவர்கள், 175 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்