"இன்னும் பத்தே நாட்களில்.." - தேர்வெழுதிய 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய தகவல்

தமிழகம் முழுவதும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

Update: 2022-06-01 06:48 GMT

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் இன்று முதல் தொடங்க உள்ளது. 10 நாட்களுக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வரும் 23ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதேபோல், 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் இன்று தொடங்கி, வரும் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், 11ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்