கடலோரத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டும் திட்டம் - எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
அர்ஜென்டினாவில் கடலோரத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.;
அர்ஜென்டினாவில் கடலோரத்தில் எண்ணெய்க் கிணறு தோண்டும் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அரசின் இந்தத் திட்டமானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடல் வளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை வலியுறுத்தி ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.