வெடித்துச் சிதறிய எண்ணெய்க் கப்பல் - கப்பலில் இருந்த ஊழியர்களின் நிலை கேள்விக்குறி?

நைஜீரியாவில் எண்ணெய் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் வெடித்த விபத்திற்கு மோசமான பராமரிப்பே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-02-05 09:33 GMT
நைஜீரியாவில் எண்ணெய் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் வெடித்த விபத்திற்கு மோசமான பராமரிப்பே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. நைஜர் டெல்டா பகுதியில்  எண்ணெய்  கப்பல் திடீரென்று வெடித்துச் சிதறியது. அதில் பணியாற்றிய ஊழியர்களின் நிலைமை இன்னும் கண்டறியப்படாத நிலையில், தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் முறையான பராமரிப்பில்லாததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்