மக்களிடம் பேசி கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர்.. அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் - பரபரப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-08 16:23 GMT
மக்களிடம் பேசி கொண்டிருந்த பிரான்ஸ் அதிபர்.. அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் - பரபரப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சுக்கு சென்று கொண்டிருந்த இமானுவேல் மேக்ரான், அவ்வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரெனெ ஒரு நபர் மேக்ரானின் கன்னத்தில் அறைந்தார். பாதுகாப்பு படையினர் அந்த நபரை உடனடியாக பிடித்து இழுத்து சென்ற நிலையில், இந்த சம்பவம் பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்