அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2019-12-22 12:46 GMT
அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குடியிருப்பின் உள்ளிருந்து பெரிய அளவில் கரும்புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஏணி மூலம் குடியிருப்பில் இருந்த சிலரை மீட்டனர். நெருப்பை அணைக்கும் பணி மற்றும் மீட்புப் பணியில் அவர்கள் இறங்கிய நிலையில், வெளியில் நின்ற உறவினர்கள்,   கதறி அழுதனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது, உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை.   

Tags:    

மேலும் செய்திகள்