லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 150 அகதிகள் பலி ?

வட ஆப்பிரிக்கா நாடான லிபியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Update: 2019-07-26 22:19 GMT
வட ஆப்பிரிக்கா நாடான லிபியாவில், படகு கவிழ்ந்த விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. லிபியாவின் கோம்ஸ் நகரில் இருந்து 250 அகதிகளுடன் ஐரோப்பா சென்று கொண்டிருந்த படகு திடீரென்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  134 பேரை லிபிய கடற்படையினர் உயிருடன் மீட்டுள்ள நிலையில், காணாமல் போன150 க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்