12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவிய போப் ஆண்டவர்...

ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

Update: 2019-04-19 05:29 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, நேற்று புனித வியாழக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில் போப் ஆண்டவர் 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவி, அவர்களின் பாதங்களுக்கு முத்தமிட்டார். இத்தாலியில் உள்ள வெலட்ரி நகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வலியவர்கள் எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். பிறருக்கு சேவை புரிவதில், அதிகாரத்தன்மை மற்றும் பிறரை துன்புறுத்தல் போன்ற செயல்களுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்