வெடி வைத்து தகர்க்கப்பட்ட பிரம்மாண்ட கட்ட‌டம் : போதை பொருள் சாம்ராஜ்ஜியம் தகர்க்கப்பட்டது

கொலம்பியாவின் மெடல்லின் என்ற பகுதியில், மொனாகோ என்ற பிரம்மாண்ட கட்ட‌டம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

Update: 2019-02-23 09:58 GMT
கொலம்பியாவின் மெடல்லின் என்ற பகுதியில், மொனாகோ என்ற பிரம்மாண்ட கட்ட‌டம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த மொனாகோ கட்ட‌டம் ஒரு காலத்தில் ,போதை பொருள் கடத்தல் மன்ன‌னாக வலம் வந்த ப‌ப்லோ எஸ்கோபரின் சாம்ராஜ்ஜியமாக இருந்த‌தாக கூறப்படுகிறது. அப்போது இங்கு வந்த போதை பிரியர்கள் செய்த கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து 1993 ஆம் ஆண்டு ப‌ப்லோவை அந்நாட்டு அரசு சுட்டுக்கொல்கிறது. இதனையடுத்து அந்த பகுதியை சுற்றுலா தளமாக மாற்ற முடிவு செய்த அந்நாட்டு அரசு, கட்ட‌டத்தை வெடி வைத்து தகர்த்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்