தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை - மகிந்த ராஜபக்சே

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-05 22:57 GMT
இலங்கை இறுதி போருக்கு பின்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவில்லை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழுப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்கேவை அவர்கள் முழுமையாக நம்பியதாகவும் ராஜபக்சே குறிப்பிட்டார். தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்போவதாகவும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்