உலகின் அழகான நாய்க்குட்டி ' ப்பு ' இறந்ததாக அறிவிப்பு

உலகின் அழகான நாய் உயிரிழந்து விட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-21 04:06 GMT
உலகின் அழகான நாய் உயிரிழந்து விட்டதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பொமரேனியன் வகையைச் சேர்ந்த 12 வயதான இந்த நாய்க்குட்டியின் சேட்டைகளை, சமூக வலைதளங்களில் பல கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்த நாய், 1 கோடியே 60 லட்சம் பேர் பின் தொடர்பவர்களை கொண்டிருந்தது. இந்த நாய் குட்டிக்கு துணையாக இருந்த 'படி' என்கிற நாய் கடந்த ஆண்டு இறந்துவிட்டதால், சோகமாக இருந்த 'ப்பு' எனப் பெயரிடப்பட்ட இந்த அழகிய நாய், கடந்த சில நாட்களாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அதன் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 'ப்பு' இறப்புக்கு அதன் ரசிகர்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்