மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தல் வழக்கு : இலங்கை முப்படை தளபதி கைது

இலங்கையில் மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சாட்சிகளை மறைத்ததாக அந்நாட்டின் முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-11-29 05:34 GMT
இலங்கையில் மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்தப்பட்ட வழக்கில் சாட்சிகளை மறைத்ததாக அந்நாட்டின் முப்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்தி செல்லப்பட்டது தொடர்பான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரவீந்திர விஜேகுணரத்ன ஆஜரான நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய நபருக்கு ​அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிடடத்தை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்