அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து - குழந்தைகள் உட்பட 19 பேர் பலி

துருக்கியில் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2018-10-15 04:10 GMT
துருக்கியில் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு துருக்கியின் லிஷ்மிர் மாகாணத்தில் இருந்து கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவுக்கு, அகதிளை ஏற்றிச்சென்ற வாகனம், திடீரென தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகிச் சென்றது. இதையடுத்து, நிலைதடுமாறிய அந்த வாகனம், அருகில் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்