ஆடை தயாரிக்க விலங்கு ரோமம் பயன்படுத்த எதிர்ப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீசிஸில், விலங்கு நல ஆர்வலர்கள் ஒன்றுகூடி, பேரணி நடத்தினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசிஸில், விலங்கு நல ஆர்வலர்கள் ஒன்றுகூடி, பேரணி நடத்தினர். இதில் விலங்குகளைக் கொன்று அதன் தோல் மற்றும் ரோமங்களை பயன்படுத்தி ஆடை தயாரிப்பதற்கு எதிராக, முழக்கங்களை எழுப்பினர். அப்போது, சிலர் விலங்குகளை போல வேடமணிந்து வந்திருந்தனர். நவீன ரக ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் விலங்குகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.