ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிசயம் - கடவுளாக மாறிய ரயில்வே காவலர்

Update: 2024-04-17 07:06 GMT

மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை, துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவலரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து இறங்கிய அருள்தாஸ் என்ற முதியவர், நடை மேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கி கொண்டார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் புருஷோத்தமன் துரிதமாக செயல்பட்டு அருள்தாஸை பத்திரமாக மீட்டார். காவலர் புருஷோத்தமனின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி பதிவுகளை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்