நள்ளிரவில் திருடனோடு ஆக்ரோஷமாக மல்லுக்கட்டிய முதியவர் - சென்னை அருகே அதிர்ச்சி

Update: 2024-05-09 11:11 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, இருசக்கர வாகனத்தை திருடி சென்ற திருடனுடன் முதியவர் ஆக்ரோஷமாக போராடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கடந்த திங்கட்கிழமை இரவு, இரு சக்கர வாகனம் திருடவந்த இருவரை கிரி என்பவர் மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். அப்போது ஒருவனது செல்போன் கீழே விழுந்த நிலையில், இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு தப்பிச் சென்றான். அப்போது பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், இருசக்கர வாகனத்தையும் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் கிடந்த ஆதார் கார்டு, ATM கார்டு மற்றும் போதைப்பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்