தென்காசி அருகே ஸ்டூடியோவில் திடீர் ரெய்டு.. NIA-வால் காலையிலேயே பரபரப்பான ஊர்

Update: 2024-02-02 08:34 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ஸ்டூடியோவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சங்கரன் கோவில் அருகேயுள்ள, விசுவநாதபேரி கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன். நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி நிர்வாகியான இவரை, கடைசி இரண்டு நாள்களாகவே என்ஐஏ அதிகாரிகள் நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் திடீரென என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதால், கிராமமே பரபரப்புக்குள்ளானது.

Tags:    

மேலும் செய்திகள்