சென்னைக்கு வந்த பச்சை கம்பளம் - வாகன ஓட்டிகளே இனி நோ டென்ஷன்!

Update: 2024-05-09 07:25 GMT

கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள எட்டு முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஈ.வெ.ரா பெரியார் சாலை, ராஜா முத்தையா சாலை சந்திப்பு உள்பட 8 இடங்களில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலுக்கு பசுமை பந்தலின் நிழல் சற்று ஆறுதலாக இருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள், மாநகராட்சியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்