சுற்றிய வயர்கள் பேருந்து அடியில் சிக்கிய இளைஞர்..ஒரே நொடியில் மாறிய சீன்... சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-05-09 09:13 GMT

சென்னை ராயபுரத்தில், பிரதான சாலையின் குறுக்கே சென்ற கேபிள் வயர் சிக்கி பைக்கில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராயபுரம் கல்மண்டபம் சாலையில் நடந்த இந்த விபத்தில், வேலைக்கு சென்று கொண்டிருந்த அசோக் என்ற இளைஞர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். பாதுகாப்பற்ற முறையில் சாலையின் குறுக்கே தொங்கிய தனியார் இண்டெர்நெட் நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள் வயர்கள், இளைஞரின் பைக்கில் சிக்கியதில் விபத்து நிகழ்ந்திருக்கிறது. சட்டென கட்டுபாட்டை இழந்து கீழே விழுந்த இளைஞர், எதிரே வந்த அரசு பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்