நேரே வரும் செந்தில்பாலாஜி.. இன்று என்ன நடக்க போகிறது?
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். செந்தில் பாலாஜிக்கு 33-வது முறையாக நீட்டிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனிடையே, அமலாக்கத்துறை வழக்கின் அசல் ஆவணங்களை கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை பெற்றுக் கொள்வதற்காக செந்தில் பாலாஜி இன்று நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், இன்றைய தினம் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகிறார்.