`நட்பு-னா என்னனு தெரியுமா..?' - 37 ஆண்டுகள் கழித்து சங்கமித்த பள்ளி நண்பர்கள்

Update: 2024-02-12 02:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1985ஆம் ஆண்டில், 11ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 37 ஆண்டுகளுக்குப்பின் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடிய நிலையில், தங்களது பள்ளி கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்