லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி... சிக்கிய ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்

Update: 2023-09-13 11:05 GMT

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில், தேனியில் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்த முஹம்மது ஷாஜகான், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளராக உள்ளார். இந்நிலையில், தேனி அல்லிநகரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்