தனியார் பள்ளி பெண் ஊழியர் விபரீத முடிவு - சிக்கிய கடிதம் - பெரம்பலூரில் அதிர்ச்சி

Update: 2023-10-26 03:16 GMT

பெரம்பலூரில், தனியார் பள்ளி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சுபா ஆடலரசி என்பவர், பெரம்பலூரில் இயங்கும் பள்ளியில் அலுவலக உதவியாளராகவும், விடுதி காப்பாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், சுபா ஆடலரசி, தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதில், உடல்நல பாதிப்பு, தீராத மன உளைச்சல் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்