தேரில் வந்த திருமுடி சாஸ்தா..! வடம் பிடித்து இழுத்த பெண்கள்... பொறையாறில் கோலாகலம்

Update: 2024-04-26 14:21 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் சித்திரை விழா தேரோட்டம், வெகுவிமர்சியாக நடைபெற்றது.

பொறையாறு நாடார் எஸ்டேட் குடும்பத்திருக்கு சொந்தமான ஸ்ரீ திருமுடி சாஸ்தா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த கோவிலில், இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19, ந்தேதி தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அய்யனார் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்