கேவலமான செயலுக்கு சித்திரை திருவிழாவை பயன்படுத்திய நபர் - கூட்டத்தோடு கூட்டமாக மதுரையில் பயங்கரம்

Update: 2024-04-24 03:24 GMT

மனைவியுடன் அடிக்கடி பேசுவதை எச்சரித்த கணவனை, மதுரை சித்திரை திருவிழா கூட்டத்தின் போது கொலை செய்ய முயன்றபோது, தடுக்க முயன்ற அவரது நண்பர் உயிரிழந்தார்.

மதுரை மாநகர் ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மனைவியோடு, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இதை அறிந்த கார்த்திக், சதிஷை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், சித்திரை திருவிழா கூட்டத்திற்கு வந்த கார்த்திக்கை, கத்தியால் குத்தியுள்ளார். அப்போது கார்த்திக்குடன் இருந்த அவரது நண்பர் சோனை முத்து என்பவர், தடுக்க முயன்றுள்ளார். அப்போது, கத்தி, சோனை முத்துவின் கழுத்தில் குத்தியதில், காயம் அடைந்த அவர் மருத்துவனையில் உயிரிழந்தார். கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுசத்து சதீஷை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சதிஷுடன் யாரும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்