மருமகனுக்கு தலை தீபாவளி பரிசு - 44 சவரன் நகை அபேஸ் - சென்னையில் அதிர்ச்சி

Update: 2023-11-14 10:19 GMT

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பொதுப்பணித்துறை ஊழியர் குடியிருப்பில் வசித்து வரும் கண்ணன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ஜெயந்தி, தலைமைச் செயலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி தனது மகளுக்கு தலை தீபாவளி என்பதால் மருமகனுக்கு, கண்ணன், 4 சவரன் தங்க நகை வாங்கி பீரோவில் வைத்துள்ளார். தீபாவளி அன்று நகையை எடுக்க பீரோவை திறந்தபோது அதில் இருந்த 4 சவரன் நகை மற்றும் 44 சவரன் தங்க நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் வேலை பார்த்த லட்சுமி, உஷா மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்