சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. ஓடுபாதையில் ஓடும்போதே திடீர் கோளாறு - கதிகலங்கிய 158 பயணிகள்

சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்ட விமானம், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது...

Update: 2022-06-11 07:50 GMT

சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. ஓடுபாதையில் ஓடும்போதே திடீர் கோளாறு - கதிகலங்கிய 158 பயணிகள்

சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்ட விமானம், திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது...

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து, தாய்லாந்து செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை, தக்க நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால், 164 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 158 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் இன்று அதிகாலை தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமானம் செல்ல இருந்தது. ஓடுபாதையில் விமானம் ஓடத் தொடங்கிய சில நிமிடங்களில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்து உள்ளார். இதனையடுத்து, விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயந்திரக் கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்