சென்னையில் பேரதிர்ச்சி.. பஸ் டயரில் சிக்கி துடிதுடித்து பிரிந்த உயிர்

Update: 2024-03-19 16:21 GMT

சென்னை பாரிமுனை அருகே ஓடும் பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார், சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக பாரிமுனையில், அரசு பேருந்தில் ஏற முயன்று கீழே விழுந்துள்ளார். அப்போது, பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஓட்டுநர் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்