சென்னையை அதிர வைத்த மெகா கும்பல்... 7 நாட்களில் அரங்கேறிய 21 சம்பவங்கள்

Update: 2024-03-28 16:20 GMT

சென்னையில், கடந்த 7 நாட்களில் அரங்கேறிய 21 திருட்டு சம்பவங்களில் 31 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 சவரன் தங்க நகைகள், 4 செல்போன் மற்றும் ஒன்பதரை லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 6 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு லாரியை மீட்டனர். மேலும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 50 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்