தொழிலதிபருக்கு 2 வருடமாக டிமிக்கி கொடுத்த பாஜக பெண் நிர்வாகி.. திருச்சியில் பரபரப்பு

Update: 2024-03-02 12:29 GMT

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், கட்டடப் பணிகளுக்கு டைல்ஸ் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் பாஜக பெண் நிர்வாகி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

திருவெறும்பூர் அருகேயுள்ள கணேஷ் நகரில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் ரேகா. பாஜக நிர்வாகியான இவரை, திருவெறும்பூர் பிரகாஷ் நகரை சேர்ந்த தொழிலதிபர் கண்ணன் என்பவர், கட்டட பணிகளுக்காக டைல்ஸ் கேட்டு 2 வருடங்களுக்கு முன்பு அனுகியதாக கூறப்படுகிறது. இதில், குஜராத்தில் இருந்து மலிவு விலையில் டைல்ஸ் கற்கள் வாங்கித் தருவதாக கூறி சுமார் இரண்டரை லட்ச ரூபாய் பணம் பெற்ற ரேகா, சொன்னபடி டைல்ஸ் கற்கள் வாங்கித் தரவில்லை எனவும், பணத்தை திருப்பி கேட்ட போது கட்சி பெயரில் கண்ணனை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கடந்தாண்டே போலீசில் புகாரளித்திருப்பதாகவும், போலீசார் முன்பு பணத்தை திருப்பித் தருவதாக கூறிய ரேகா, தற்போது வரை பணத்தை தரவில்லை என தொழிலதிபர் கண்ணன் திருவெறும்பூர் போலீசில் புகாரளித்துள்ள நிலையில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்