சென்னையில் தோழிகளுடன் பாருக்கு சென்ற இளைஞர் நேர்ந்த பயங்கரம் -வெளியான ஷாக் வீடியோ...இறங்கிய போலீஸ்

Update: 2024-04-18 06:52 GMT

#chennai | #bar

சென்னையில் தோழிகளுடன் பாருக்கு சென்ற இளைஞர் நேர்ந்த பயங்கரம் -வெளியான ஷாக் வீடியோ...இறங்கிய போலீஸ்

சென்னையில் தனியார் பாரில் இளைஞர்கள் இடையே மோதல் வெடித்தது.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், கடந்த 14ஆம் தேதி தோழிகளுடன் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அங்கு டிஜே நிகழ்ச்சி நடந்துக்கொண்டிருந்த போது, இளைஞரின் தோழியிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், சம்பந்தப்பட்ட நபரை தட்டிக்கேட்டதாகவும், அப்போது, இளைஞரையும், அவரது நண்பர்களையும் ஒரு கும்பல் தாக்கியதாகவும் தெரிகிறது. இதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பெற்றுக்கொண்டு ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பாரில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்