யாரும் பார்க்க வராததால் புழல் சிறையில் கைதி விபரீத முடிவு

Update: 2023-11-21 08:38 GMT

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி ஒருவர் அளவுக்கதிகமான மாத்திரைகளை விழுங்கி தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறையில் தம்மை யாரும் பார்க்க வராததால், விரக்தியில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து சக கைதிகள் அளித்த தகவலின் பேரில், சிறைக்காவலர்கள் கைதி நாகேந்திரபாபுவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்