ஆண்டாள் கோயிலை திடீரென வட்டமடித்த ட்ரோன் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு

Update: 2022-10-15 12:04 GMT

ஆண்டாள் கோயிலை திடீரென வட்டமடித்த ட்ரோன் - ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயில் கோபுரம் மற்றும் கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தங்க விமானத்தை பாதுகாக்கும் பணியில் துப்பாக்கு ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் ட்ரோன் ஒன்று, கோயில் மேல் பகுதி, தங்க விமானம், ராஜ கோபுரத்தை சில நிமிடங்கள் வட்டமடித்தது.

இதையடுத்து, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், ட்ரோனை தேடினர்.

சில நிமிடங்களிலேயே ட்ரோன் அந்த இடத்திலிருந்து மறைந்தது.

இது தொடர்பாக போலீசார் இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்