கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - புதிய திருப்பம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் புதியதாக மேலும் சிலர் கைதாக வாய்ப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-05-06 03:09 GMT
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் புதிய கோணத்தில் புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் புதியதாக மேலும் சிலர் கைதாக வாய்ப்பு என தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியான பிஜின்குட்டியின் சகோதரர் மோசஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். காலை 10.30 மணிக்கு கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு வந்த மோசஸ் உட்பட 3 பேரிடம், சுமார் ஏழரை மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இதுவரை விசாரிக்க படாத நபர்கள் ஓவ்வொருவராக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் நிலையில், புதிய நபர்களும் தனிப்படை போலீசாரின் விசாரணைக்கு உட்படுத்தபடுகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினருக்கு புதிய தகவல்கள் கிடைத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். புதிய கோணத்தில் புதிய நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் புதியதாக மேலும் சிலர் கைதாக கூடும் என கூறப்படுகின்றது.
Tags:    

மேலும் செய்திகள்