சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்தில் இன்று இலவசம்

சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்தில் இன்று இலவசம்;

Update: 2022-03-08 02:11 GMT
மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசிக்கலாம். வழக்கமாக உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்