சீட்டு கம்பெனி நடத்தி மோசடி - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

சீட்டு கம்பெனி நடத்தி மோசடி - பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Update: 2022-03-07 07:06 GMT
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, சீட்டு பணம் திருப்பி கொடுக்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், 50 ஆயிரம், ஒரு லட்சம் என பல்வேறு தொகைகளில் சீட்டு கம்பெனி நடத்தி வந்தததாக தெரிகிறது. இவரிடம், ஒரு கோடி ரூபாய் வரை பொதுமக்கள் முதலீடு செய்த நிலையில், பணத்தை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ஏமாற்றமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர், சுரேஷின் வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்