காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை | Madurai

காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை | Madurai

Update: 2022-03-05 12:44 GMT
மதுரையில் மகள் காதல் திருமணம் செய்துக் கொண்ட ஆத்திரத்தில் காதலரின் தந்தையை பெண் வீட்டார் கும்பலாக சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட குடும்பத்தினர் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹரிகிருஷ்ணன் - இறந்தவரின் சகோதரர்

"காதலித்த பெண்ணை தம்பி மகன் திருமணம் செய்து கொண்டான்"

"பாதுகாப்புகோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தான்"

"காதல் ஜோடியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்"

"போலீசார் அழைத்தும் பெண்வீட்டார் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை" 


ஐஸ்வர்யா தேவி - இறந்தவரின் மகள்

"ஆட்டோ ஓட்டிதான் அப்பா எங்களை பார்த்து வந்தார்"

"10 பேர் சேர்ந்து அப்பாவை வெட்டிக் கொன்றுள்ளனர்"

"அம்மாவும் இல்லை.. இப்போது அப்பாவும் இல்லை"

"அநாதையாக நிற்கிறேன்.. அப்பா மரணத்திற்கு நீதி வேண்டும்"
Tags:    

மேலும் செய்திகள்