ஆர்.டி.ஐ. - முறையாக பதிலளிக்காத அதிகாரிகள் - "2 அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்" : மாநில தகவல் உரிமை ஆணையர் பேட்டி

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையாக பதில் அளிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

Update: 2021-10-25 12:48 GMT
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முறையாக பதில் அளிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 அதிகாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதீப் குமார் தெரிவித்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் பங்கேற்று பேசிய மாநில தகவல் உரிமை ஆணையர் பிரதீப் குமார், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 3 லட்சத்திற்கு மேற்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்