பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் வந்தவர் பலி: கொலையா? தற்கொலையா?- போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Update: 2021-10-11 04:40 GMT
மீஞ்சூர் அடுத்த நாலூரை சேர்ந்தவர் கோபி. அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரையை ஒட்டிய புதரில் தன்னை 6 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து கொளுத்தியதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கூச்சலிட்டபடியே அவர் வெளியே வந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கோபி பலியானார். போலீசார் நடத்திய விசாரணையில் கோபிக்கு திருமணமாகாத நிலையில் ஒரு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதில் ஒருவர் தனக்கு திருமணமானதால் இனி தொந்தரவு செய்ய வேண்டாம் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் கோபி கேனில் பெட்ரோலை வாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்