"பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - கிராமசபை கூட்டத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை

"பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - கிராமசபை கூட்டத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை

Update: 2021-10-02 11:28 GMT
"பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" - கிராமசபை கூட்டத்தில் ஆசிரியர்கள் கோரிக்கை

மக்களை தேடி கல்வி திட்டத்திற்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட பாரிவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்,பாரிவாக்கம் அரசு பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.மக்களை தேடி கல்வி திட்டத்தில் வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு  பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்