இலங்கையை சேர்ந்தவர்களை ஏமாற்றியவர் கைது- மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை

இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர் வீட்டில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-19 02:19 GMT
மதுரை திருமங்கலம் கப்பலூர் பகுதியை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன், இவர் இலங்கை சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இலங்கையை சேர்ந்த 22 நபர்களை வீட்டில் தங்க வைத்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வுத்துறை கியூ பிரிவு போலீசார் விசாரணை செய்து காசிவிசுவநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோன்று பல்வேறு வழக்குகளில் இடைத்தரகர்களாக செயல்பட்ட 19 பேரின் வீட்டை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரை கப்பலூர் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் இலங்கை நாட்டை சேர்ந்த  பணம் மற்றும் ஆவணங்களை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்