தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 378 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்து 24 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 906 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்தவர்களில் இணை நோய் இல்லாத 80 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 29 ஆயிரத்து 243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 802 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.