பெட்ரோல் விலை உயர்வு - விஜயகாந்த் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-06-11 08:16 GMT
பெட்ரோல் விலை உயர்வு - விஜயகாந்த் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும், கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக மத்திய அரசு கூறுவதை தற்போதைய சூழலில் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து உள்ள விஜயகாந்த், எரிபொருள் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்