செட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு - இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உதவிப் பேராசிரியராக பணி புரிவதற்கு, தகுதித்தேர்வான செட் தேர்வை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்த உள்ள நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2021-06-07 02:25 GMT
தமிழகத்தில் உதவிப் பேராசிரியராக பணி புரிவதற்கு, தகுதித்தேர்வான செட் தேர்வை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்த உள்ள நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் 12 நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ஜூலை 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என சிதம்பரம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரொனோ பரவல் குறையாத பட்சத்தில் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும், தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்